logo

தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம்

TamilNadu Pensioners' Association

logo


தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம்

  • தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் 25.08.2002 அன்று திருச்சிராப்பள்ளியல் தொடங்கப்பட்டு, தற்போது வரை 18 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான முறையில், 30,000 க்கு மேற்பட்ட உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது. ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களின் குறைகளை அரசின் கவனத்திற்கு தேவைப்படும் நேரத்தில் கொண்டு செல்லப்பட்டு பெரும்பாலான குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன.

    நமது சங்கத்தின் நாட்குறிப்பு 2011- ஆம் ஆண்டுமுதல் வெளியிடப்பட்டு ஓய்வூதியர்கள் சம்பந்தபட்ட முக்கியமான 2024ஆம் ஆண்டுவரையிலான அரசு ஆணைகள் அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் அரசு ஆணைகளின் முக்கியத்துவம் கருதி, திரும்ப திரும்ப ஒவ்வொரு ஆண்டு நாட்குறிப்பிலும் இடம்பெற்று வருவதால் நாட் குறிப்பின் பக்கங்கள் அதிகரித்து வருவதுடன் அதற்குரிய அடக்க விலையும் கூடுதலாகின்றது.தற்போது ரூ.150/- க்கு வழங்கப்பட்டு வரும் நமது நாட்குறிப்பின் அடக்க விலையே ரூ.200/-க்கு மேலாகும். எனவே, ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசு ஆணைகள் இந்த ஆண்டு நாட்குறிப்பில் திரும்ப இடம் பெறாவிட்டாலும் அதற்கான சுருக்கங்கள் மட்டும் குறிப்பிட்டு அதற்கான சம்பந்தப்பட்ட அரசு ஆணைகளின் எண்களை அடைப்புக்குள் காண்பிக்கப்பட்டுள்ளன. மிக முக்கியமான அவ்வப்போது தேவைப்படும் அரசு ஆணைகள் சேர்க்கப்பட்டுள்ளது. வேறு அரசு ஆணை ஏதேனும் தேவைப்பட்டால், நமது சங்கத்தின் மூலம் ஏற்கனவே வெளியிடப்பட்ட நாட்குறிப்புகளில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறு இயலவில்லையெனில் கணினி வழியாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், 2024ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ள

    ஓய்வூதியர்கள் சம்பந்தப்பட்ட அரசு ஆணைகள் மற்றும் மிக தேவையான அரசாணைகள் முழுவதும், இந்த நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ளமைக்கு தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் மிகவும் மகிழ்வெய்துகின்றது. இந்த நாட் குறிப்பு ஓய்வூதிய நண்பர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு மிகமிக உதவிகரமாக இருக்கும் என்றும் உங்களுடைய உற்ற நண்பனாக திகழும் என்று நம்புகின்றோம். I

    இந்த நாட்குறிப்பை சிறப்பான முறையில் உருவாக்கிட அளவிடற்கரிய உழைப்பை இந்துள்ள தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மாநில பொருளாளர் திரு.எஸ்.காளிங்கராயன் , அவர்களுக்கும் நாட்குறிப்பை மிகவும் சிறப்பாக வடிவமைத்து தொடர்ந்து நமது சங்கத்துக்கு நேசக்கரம் நீட்டி வரும், திரு.பி.எஸ்.குமரேசன் மற்றும் இப்பணிக்கு உறுதுணையாக உதவிய அனைவருக்கும் தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

  • அன்புள்ள மாநில நிர்வாகிகளே !
    மாவட்டத் தலைவர்களே மற்றும் மாவட்ட நிர்வாகிகளே !
    வட்டக்கிளை நிர்வாகிகளே !
    இணைப்புச் சங்க நிர்வாகிகளே! வணக்கம். "தமிழ்நாடு ஓய்வூதியர் நண்பன்" இதழுக்கு நிறைந்த அளவில், புரவவலர்களையும் உறுப்பினர்களையும் சேர்ப்பதற்கு, 2024 ஆம் ஆண்டில், தாங்கள் சிறப்பான முயற்சியை மேற்கொண்டு, பத்திரிக்கை வளர்ச்சிக்கு துணை புரிந்திடுமாறு மத்திய சங்கத்தின் சார்பில் அன்புடன் வேண்டுகின்றோம்.
    தங்கள் அன்புள்ள
    கோ.சீதாராமன்
    மாநிலத் தலைவர்.

Top